மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கடலூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அழகர்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய போது சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பயணிகளான லோபா மேரி, தமிழ்வளவன், தங்கவேல், அரவிந்தன், அன்புராஜ் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்குடையே விபத்து நடந்ததும் தனியார் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.