தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் போஜன் அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன், ரமேஷ் ஆகியோருடன் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக கன்னிவாடி நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த காரை சேகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அங்கு பருத்தியை கொள்முதல் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் தேனிக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் முத்துலாபுரம் மருதநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த போஜன் உள்பட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.