அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மான்கொண்டான் நாச்சியார அம்மன் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சண்முகப்பிரியா தனது மகன்களுடன் கீழவிளாங்குடியில் இருக்கும் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகப்பிரியாவும், அவரது மகன்களும் காணாமல் போய்விட்டனர். இதனால் செந்திலும், அவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி பார்த்தனர். ஆனாலும் சண்முகப்பிரியாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து செந்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.