அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிஷா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நிஷாவின் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த நிஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நிஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.