புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் பெரிய கருப்பன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பெரிய கருப்பனை கைது செய்து, 150 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.