பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூரில் சின்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி உறவினரான நாகராஜ் என்பவருடன் சின்னம்மாள் மோட்டார் சைக்கிளில் பிள்ளங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ் சடன் பிரேக் பிடித்துள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.