திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்ல ஸ்ரீபுரத்தில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2012- ஆம் ஆண்டு பார்த்திபன் மதுரையில் இருக்கும் ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகளை வாங்கி அதற்கான பணத்தை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் சுமார் 20 லட்ச ரூபாய்க்கு வெள்ளி கொலுசுகளை பிரபாகரன் வாங்கினார். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பார்த்திபன், அவரது மனைவி சண்முகசுந்தரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஏற்கனவே பார்த்திபன் மீது நகை சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.