விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.