சேலம் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சுரேஷ் துலுக்கனூர் ஏரிக்கரையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே ரத்தக்கரை இருந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷின் மர்மமான இறப்பு பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.