விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து மீண்டும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் அய்யன்தோப்பு அருகே பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் தனசேகரன் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பணியின் போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதற்காக தனசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.