பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல புலியூர் கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.