சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காட்டூரில் ரியல் எஸ்டேட் அதிபரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது நண்பர்களான சிவக்குமார், சாமிநாதன், மணி, ராஜ்குமார், செல்லப்பன் ஆகியோருடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சங்ககிரி குப்பனூர் பைபாஸ் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் குணசேகரன் சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் வந்தவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.