சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும்போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் உற்பத்தியும் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும். கடந்த அக்டோபர் மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தது. இதனால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. பின்னர் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னது 250 கன அடியாக குறைந்தது.

இதனால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்த ராட்சத தடுப்புகள் கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து தடுப்பு வளையத்தில் இருந்த துரு அகற்றப்பட்டு கிரீஸ் மற்றும் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.