விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கீ மேன் பாக்யராஜ் என்பவர் தண்டவாளங்களை கண்காணித்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்ததும் தன்னிடமிருந்த சிவப்பு கொடியை காட்டி மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில் நிறுத்தினார்.

உடனே இதுகுறித்து சாத்தூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றதால் ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.