திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மானாமதுரையை சேர்ந்த ஆனந்தகுமார் என்பது தெரியவந்தது.

அவர் மணியக்காரன்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் சட்ட விரோதமாக ஆனந்தகுமார் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.