கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்று, வேலை முடிந்ததும் அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் பத்மநாபனை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியுள்ளனர்.

இதனை சக்திவேல் என்பவர் தட்டி கேட்டார். இதில் கோபமடைந்த ராஜசேகரும் ஞான குருவும் சக்திவேலை கட்டையால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.