அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது பாக்யராஜ் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாக்யராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.