அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது உறவினரான இளஞ்சேரன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன், இளஞ்சேரன் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனையடுத்து உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குறுக்கே நடந்து சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக குலோத்துங்கனையும், இளஞ்சேரனையும் ஆற்று தண்ணீர் இழுத்து சென்றது. இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.