தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துரைராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.