தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிறுவியது. இந்நிலையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர். பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.