தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி காமராஜர் நகரில் மாதன்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தீபா சாமிசெட்டிபட்டியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மாதன் உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி தனது தாய் இறந்து விட்டதால் தீபா அவரை பார்க்க அங்கு சென்றார். அதே நாள் தீபாவின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 12 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி வீட்டிற்கு சென்ற தீபா பீரோ உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகை திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தாய் இறந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. நேற்று மீண்டும் ஊருக்கு வந்த தீபா அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு சம்பவம் நடந்த 17 நாட்களுக்கு பிறகு தாமதமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.