தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவரெட்டியூரில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல நகை கடையில் விஜய் 100 பவுன் தங்க நகை வைர நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயின் மனைவி நர்மதா, விஜயின் மாமியார் யோகா ராணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் விஜயை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் விஜய் இருக்கும் இடம் குறித்து போலீசார் முனிரத்தினத்திடம் கேட்டனர். மேலும் வீட்டிலிருந்து 38 கிராம் தங்க நகைகள் இரண்டு செல்போன்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த முனி ரத்தினம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று முனிரத்தினத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.