திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் கொத்தனாரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்த சக்திவேல் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வார விடுமுறை தினத்தில் இரண்டு பேரும் வெளியே செல்வது வழக்கம். அப்படி சொல்லும் போது எடுத்த புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இதனை பார்த்த ராஜாவும் அவரது குடும்பத்தினரும் சிறுமியை கண்டித்தனர். இனிமேல் சக்திவேலுடன் பழகக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி பிரேக் ஆயிலை குறித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.