தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில் பருத்தி பகுதியில் தமிழ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தராஜ் பாப்பிரெட்டி பட்டியில் இருக்கும் தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆனந்தராஜுக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியின் தங்கையிடம் ஆசை வார்த்தைகள் கூறி சேலத்தில் உள்ள லோகூர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார். இதனால் அந்த பெண் இரண்டு மாத கர்ப்பிணி ஆனார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.