மதுரை மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பட்டியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், 10 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்லப்பாண்டிக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளில் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வெளியூர் சென்றிருக்கும் செல்லப்பாண்டி வீடு திரும்பினால் தான் திருடு போன நகை பணத்தின் மொத்த மதிப்பு தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சிடை ஏற்படுத்தியுள்ளது.