கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் பாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற கார் பாலசாமியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியிடம் பாலசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.