தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலதண்டாயுத நகரில் மரக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடையில் மாணிக்கம் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மாணிக்கம் மரம் வெட்டும் இயந்திரம், பாலிஷ் போடும் இயந்திரம், துளையிடும் எந்திரம் ஆகியவற்றை திருடி விட்டு தலைமறைவானதாக தெரிகிறது. இதுகுறித்து சோலையப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மாணிக்கத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.