தேனி மாவட்டத்தில் உள்ள சரத்து பட்டியில் வீரமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரெஜினா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் வீர முருகன் தேனியில் இருக்கும் நகை கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு வீரமுருகன் தனது தாயிடம் கம்பத்தில் தங்கி விட்டு மறுநாள் வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து வேலைக்கு சென்ற போது பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வீர முருகன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரமகன் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வீரமுருகனின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.