புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை அறிந்து பிரதமர் மோடி மிகவும் கவலை அடைந்தார். உடனே நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு 450 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் பற்றி நேரில் ஆய்வு செய்து முதல்வரிடம் ஆலோசித்தேன். சென்னை வெள்ள மேலாண்மை பணிக்கு 561 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ராஜ்நாத் சிங் பேசினார்.