தமிழ்நாட்டு மக்கள் சார்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்..

மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தமிழக மக்களின் நலன் கருதி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 450 கோடியும் மற்றும் நகர்புற வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ் 500 கோடியும் ஒதுக்கியுள்ளார். நம் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.