நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் பேசிய அவர் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதால்,  நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தை கேட்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.