பாதிப்பு வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதே பெரும்பாலான அரசுகளின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், எல் நீனோ போன்ற பருவநிலை மாற்றங்களால் பாதிப்பு ஏற்படும் முன், தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் தீட்டி செயல்படுவதே உண்மையான சிறந்த நிர்வாகத்திற்கு அடையாளம் ஆகும்.

அந்த வகையில், வரவிருக்கும் எல் நீனோ பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழக மக்கள் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு முன்முயற்சி எடுத்துள்ளது. இதற்காக ஐ.ஐ.டி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம், டபிள்யூ.ஆர்.ஐ இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது பாராட்டத்தக்கது.

இக்குழுவானது மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களைக் கண்காணித்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிதல், முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வெள்ளத் தடுப்பு உத்திகளை உருவாக்குதல் போன்ற முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தும்.

அறிவியல் பூர்வமான திட்டமிடல் மூலமாகவே பேரிடர்களைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

பேரிடர் வந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதை விட, முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பதே சிறந்த தலைமையின் பண்பு.

“>

 

அந்த மாற்றத்தை மக்கள் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இப்போது தமிழ்நாட்டில் நிகழ்த்தி வருகிறது.