அதிமுக பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல ஓபிஎஸ்யின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா இல்லை என்றால் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியில் இணைவாரா போன்ற பல கேள்விகள் எழ தொடங்கியுள்ளன.