பாஜக பாமக இடையிலான கூட்டணி இன்று உறுதியானது. தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை மற்றும் எல் முருகனை ராமதாஸ் மனைவி வரவேற்றார். அதன்பின்னர் ராமதாஸ் நல்ல நேரம் பார்த்து கையெழுத்திட்டார். இந்நிலையில் ஒரே இரவில் பாமகவின் முடிவு தமிழக அரசியலை மாற்றியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு நன்றி தெரிவித்த அவர், ராமதாஸ் யோசித்த பல விஷயங்களை மோடி செயல்படுத்தி வருவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சேலத்தில் நடக்கும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புணி பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்