திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பத்தை ஆசாத் புரத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாகரன் என்ற மகன் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி வெளிநாட்டில் வேலை பார்த்த கருணாகரன் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாடியில் நின்று செல்போன் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கருணாகரன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.