திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
திக்.. திக்.. டெலிவரிக்கு வந்தவன் செஞ்ச காரியம்… ஊழியரின் அராஜகத்தால் அலறிய இளம்பெண்… பகீர் பின்னணி..!!!
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த…
Read more“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…
Read more