திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…
Read more“இவங்க பண்றதுதான் சுத்த தற்குறி வேலை!” மேயர் பிரியாவை வெளுத்து வாங்கிய தவெக எம்.எல்.ஏ பல்லவி.. குத்துவிளக்கு மோதலின் க்ளைமாக்ஸ்..!!
“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக நிகழ்ந்ததை விளக்கியுள்ளார். மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு…
Read more