திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more