திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே மேட்டூர் தெற்கு தெருவில் ரத்தினராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் கிருத்துவராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராமநாதன், மதுரையை சேர்ந்த சிவராமன், மாணிக்கவாசகம் ஆகியோர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி சகோதரர்களிடம் 13 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கினை விசாரித்த அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிவராமனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து ஏற்கனவே ராமநாதன் விடுவிக்கப்பட்டார். மாணிக்கவாசகம் இறந்துவிட்டார்.