திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர் ஆவணி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகுமாரும் மாரியம்மாள்(20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நேற்று காதலர்கள் ஸ்ரீ ராம சமுத்திரத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காட்டுப்புதூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் புதுமண தம்பதியினரை விஜயகுமாரின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.