கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கம்புலியூரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும், பத்மாவுக்கும் இடையே குடிநீர் குடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பத்மாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த இளங்கோவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த பத்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளங்கோவை மீட்டு கரூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்மாவின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.