திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழையில் மீனவரான அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேஷ்மி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷ்மி தனது குழந்தைகளுடன் தூத்துக்குடியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

நேற்று மதியம் ரேஷ்மியின் தாய் தனது மகளை சமாதானப்படுத்தி குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் மகளை விட்டுவிட்டு அவர் திரும்பி சென்றார். இதனை தொடர்ந்து மாலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அகிலன் தனது மனைவியின் தலையில் தையல் இயந்திரத்தால் ஓங்கி அடித்தார்.

இதனால் படுகாயமடைந்த ரேஷ்மி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து றிந்தா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேஷ்மியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அகிலனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.