திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.