விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.