ஆன்லைன் கேம்ஸால் 17 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை சேர்ந்த மாணவன் போனில் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ்களுக்கு அடிமையான அச்சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு, கை, கால்களும் நிலையாக இல்லாமல் போனது.

இதையடுத்து அச்சிறுவனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.  விளையாட்டு மோகத்தில் கை, கால்கள் நிலையாக இல்லாததால் அவை கட்டப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.