திண்டுக்கல் மாவட்டம் காமுபிள்ளைசத்திரம், புதுகோடாங்கிபட்டி, கோழிபண்ணை, வீரக்கல், கோடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் உள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் டை அருகிலேயே தனிநபர் சிலர் மதுபானங்களை விற்பனை செய்தனர்.

முதல் நாளே டாஸ்மாக் விற்பனையாளர்கள் துணையுடன் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு விடுமுறை தினமான நேற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். மேலும் பணம்   கூகுள் கொடுக்க முடியாதவர்கள் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.