நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களின் பெயரால் களத்தில் அரங்கேறிவரும் சில குளறுபடிகள் மற்றும் அரசியல் சுயநலங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, மாணவர்களின் உண்மையான வேதனைகளைப் பேசாமல், தங்களது அரசியல் லாபத்திற்காகப் போராட்டங்களை மடைமாற்றும் நபர்களை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

உண்மையான மாணவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தாண்டி, போராட்டக் களத்தை சினிமா, பொழுதுபோக்கு மற்றும் கேலி கிண்டல்களுடன் திசைதிருப்பும் ஒரு கூட்டம் செயல்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துயரங்களுக்கு ஆளாகித் தவிக்கும் மாணவர்களின் உண்மையான உழைப்பையும், தியாகத்தையும் சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காகக் கறைபடுத்துவதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாணவர் நலன் எள்ளளவும் கவலைப்படாமல், தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே சில தரப்பினர் இதுபோன்ற போராட்டங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சிஜபி அமைப்பினர் தங்களது போராட்டத்தின் வீரியத்தைக் காப்பாற்றிக்கொள்ள, இதுபோன்ற போலியான ஆதரவாளர்களையும் விளம்பரத் தேடுபவர்களையும் உடனடியாகக் கண்டறிந்து அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

“>

 

நீட் எதிர்ப்பு எனக்கூறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.