பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், பால் உற்பத்தியாளர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.43.75.

எருமை பாலுக்கு ரூ.55 கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். புதிய விலை பட்டியலில் அறிவித்துள்ள (கொழுப்பு) FAT- 4.3 மற்றும் (இதர சத்து )SNF – 8.2 வரை அறிவித்துள்ள விலை பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.