சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் ரஹ்மத்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரஹ்மத் 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரஹ்மத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ரஹ்மத்துக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.