பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்லாயி நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் காயத்தின் வலி தாங்க முடியாமல் செல்லாயி மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.