அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு பின்புறம் பெண் ஒருவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்று வீட்டிற்கு பின்புறம் மது விற்பனை செய்து கொண்டிருந்த சாவித்திரி என்ற பெண்ணை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாவித்திரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.